தஞ்சாவூர், ஏப்.15 - அரசு வேலையில் இருக் கும் இரண்டு மகன்கள் தாயை கவனிக்காமல் வீட்டுக் குள் பூட்டி வைத்துள்ள சம்ப வம் வேதனையை ஏற்படுத் தியுள்ளது. தஞ்சாவூர் காவிரி நகர் 5 ஆவது தெருவை சேர்ந்தவர் ஞானஜோதி (62). இவரின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது கணவரும், மகள் ஒருவரும் இறந்து விட்டனர். தற்போது, இவரின் மூத்த மகன் சண்முகசுந்தரம் சென்னையில் காவல்துறை ஆய்வாளராகவும், இளைய மகன் வெங்கடேசன் என்ப வர் தூர்தர்ஷன் தொலைக் காட்சியிலும் பணியாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக, இரண்டு மகன்களும் ஞான ஜோதியை கவனிக்காமல் கைவிட்டுள்ளனர். மேலும், அவரை ஒரு வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். இதனால் ஞானஜோதி மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறி னார். எப்போதாவது மகன்கள், பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு சென்று வந்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கேட்டால், அவர் களிடம் இரண்டு மகன்களும் சண்டை போடுவார்கள். இத னால், அக்கம் பக்கத்தினரும் கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். இருப்பினும் அவ்வப்போது, அப்பகுதி யினர் உணவு வழங்கி வந்துள்ளனர். இதனால் சரி யான உணவு இல்லாமல் ஞானஜோதி எலும்பும் தோலு மாக மாறிபோனார்.
தண்ணீர், உணவு முறையாக கிடைக் காமல், வீட்டின் தரையில் கிடந்த மண்ணை தின்று இருந்து வந்துள்ளார். இதை வீடியோவாக எடுத்த சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன், வாட்ஸ் அப் மூலம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகாராக அனுப்பினார். ஆட்சி யர் உத்தரவின் பேரில், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலை மையிலான குழுவினர், மூதாட்டி ஞானஜோதியை கால் பாதுகாப்புடன் மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அத்துடன் தாயை கைவிட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மூதாட்டி ஞானஜோதியை மீட்பதற் காக வந்த அதிகாரிகளிடம் மூத்த மகன் சண்முகசுந்தரம், சொத்தையும், பென்சன் பணம் 30 ஆயிரத்தையும் தம்பி வெங்கடேசன் எடுத்து கொள்வதாகவும் வாக்குவாதத்தில் ஈடு பட்டாரே தவிர, தனது தாயை பற்றி அவர் கொஞ்சமும் இரக்கமில்லாமல் நின்றது தான் வேதனையின் உச்சம்.