districts

img

பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு சிபிஎம் வேட்பாளர் மனு தாக்கல்

தஞ்சாவூர், பிப்.3- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில், 22 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.செந்தில்குமார் வியாழனன்று, தேர்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் நகரமைப்பு அலுவலருமான முருகானந் தத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.தமிழ்ச்செல்வி, எம்.செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மோரிஸ் அண்ணாதுரை,  முருக.சரவணன், சாமிநாதன், சுந்தரபாண்டியன், மெரீனா ஆறுமுகம், கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், மோகன், கோர்ட் அண்ணாதுரை, கே. செந்தில்குமார், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.