கும்பகோணம், அக்.20- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில், ‘மாசில்லா தீபாவளி மேளா’ கொண்டாடப்பட்டது. விழாவினை பள்ளித் தலைவர் கார்த்திகேயன், பள்ளித் தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அம்பிகாவதி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பாரம்பரிய உணவு வகைகளை விதவிதமாக செய்து கொண்டு வந்திருந்தனர். அனைத்து உணவு வகைகளும் உடலுக்கு வலிமை தரும் வகையிலும் புத்துணர்ச்சி தரும் வகையிலும் அமைந்திருந்தன. முதல் 10 உணவு வகைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.