districts

மாரத்தான் ஓட்டம் ஒத்திவைப்பு  

தஞ்சாவூர்,  ஜூன் 26-  போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதி ரான சர்வதேச தினத்தை  முன்னிட்டு ஜூன் 26  ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தஞ்சையில் நடைபெறவிருந்த மாரத் தான் ஓட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து பெரி யார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகப் பதிவாளர் பி.கே. சிறீவித்யா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில், “பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப நிறுவனம் சார்பாக ஜூன் 26 (ஞா யிறு) அன்று நடைபெற விருந்த மாரத்தான் 2022  நெடுந்தூர ஓட்டப் போட்டி, தவிர்க்க முடி யாத சில காரணங்களால்  ஜூலை 10  (ஞாயிற்றுக் கிழமை) அன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழக சுகாதாரம் மற்றும் குடும் பநல துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அனைத்து விருந் தினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

;