தஞ்சாவூரில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது: “விவசாயத்தை இயந்திரமயமாக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் நிகழாண்டு இயந்திரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இதை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் வருகிற நிதி யாண்டில் போடப்படும் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு புதிய திட்டங்கள் அதிகமாக அறிவிக்கப் படும். அடுத்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பாக வருகிற பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெ றும். தருமபுரி, நீலகிரியில் நியாய விலைக் கடைகள் மூலம் கேழ்வரகு 2 கிலோ வீதம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக விவ சாயிகளிடமிருந்து கருத்துகளைக் கேட்ட றிந்து செயல்படுத்துமாறு தமிழக முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி, தஞ்சாவூர், திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட் டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, நெல் கொள்முதல் செய்கிறபோது ஏற்படும் பிரச்சனைகள் தொ டர்பாக விவசாயிகளிடமிருந்தும், விவசாய சங்கங்களிடமிருந்தும் கருத்துகள் கேட்ட றியப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து, நாற்றாக முளைத்து விட்டன.
இதை மக்களுக்கு அரிசியாக விநி யோகிக்கும்போது கருப்பு அரிசி, பழுப்பு அரிசி கலந்த அரிசியாக கொடுக்கப்பட்டது. அந்தத் தவறுகள் இனிமேல் நிகழாமல் இருப் பதற்கு இக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தின் அடிப்படையில், நிகழாண்டு அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு, அர வைக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல் வரின் ஆலோசனையைப் பெற்று உணவுத் துறை அமைச்சர், துறை அலுவலர்கள் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்ததால், நெல் மூட்டைகள் திறந்த வெளியில் கிடக்காமல், கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டன. இவை அனைத்தும் அரவை செய்யப்பட்டு, அரிசி யாக்கப்பட்டு, நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட் டுள்ளது. சம்பா அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலிருந்து இந்தப் பருவத்துக்கு இயந்திரங்கள் நிறைய வருகின்றன. எந்தெந்த பகுதியில் இயந்தி ரங்கள் இருக்கின்றன என்பதை விவசாயி கள் அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் தகவல் பதிவு செய்யப்படுகிறது. இதேபோல, இயந்திரத்துக்கு வாடகை தொகை இவ்வளவுதான் வாங்க வேண்டும் எனவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சீர்காழி பகுதியில் பலத்த மழையால் 32,700 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதில், 33 சத வீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, விரை வில் அனுமதி வழங்கப்படவுள்ளது”. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.