தஞ்சாவூர், மே 19- சேதுபாவாசத்திரம் அருகே மனோரா சுற்றுலாத் தலத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் 1814 ஆம் ஆண்டு வாட்டர்லூ என்ற நெப்போலியனுடன் நடைபெற்ற போரில், ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதை பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர், இரண்டாம் சரபோஜி மனோரா என்ற நினைவுச் சின்னத்தை அமைத்தார். இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை யில், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களை அனு பவித்து வந்தனர். எனவே, மனோராவில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடம் கட்டுவது, படகுச் சவாரி வசதி என புதிய கட்ட மைப்பை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மனோராவில் நடைபெற்று வரும் படகுச்சவாரி தளம் அமைக்கும் பணி, ஓய்வு விடுதி, பூங்கா அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலை வர் மு.கி.முத்துமாணிக்கம், திமுக தலைமைக் கழக பேச்சாளர் அ.அப்துல் மஜீது, ஒன்றியப் பொறியாளர் அருண் மற்றும் பலர் உடனிருந்தனர்.