தஞ்சாவூர், ஏப்.28- பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறி ஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் பொது நூலகம் திறக்கப்பட்டது. பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் உள்ள பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு வில், பொது நூலகத்தை முதன்மை மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இதில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி பி.சுதா, தலைவர் மற்றும் சார்பு நீதிபதி ஏ.பாலகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.ரெங்கேஸ்வரி மற்றும் வழக்கறி ஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.