districts

img

நாச்சியார் கோவில் மகளிர் பள்ளியில் நூலகம் திறப்பு

கும்பகோணம், ஜூலை 7- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  புதிதாக கட்டப்பட்டுள்ள முன்மாதிரி நவீன நூலகத் தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யா மொழி திறந்து வைத்தார்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ஆம்  வகுப்பு வரை 1400 மாணவி யர் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வரு கின்றனர். இப்பள்ளியில் முன் மாதிரி நூலக கட்டிட திறப்பு  விழா தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தலைமையில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்மாதிரி நூலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் மேலும் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று  பள்ளியில் முதல் மாணவி யாக தேர்ச்சி பெற்ற சிவ சங்கரி என்ற மாணவியை பாராட்டினார். இதனைத் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார். இந்நிகழ்ச்சியில், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவரும் மாநி லங்களவை உறுப்பினரு மான கல்யாண சுந்தரம், மயி லாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், திரு விடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்  கரசு, பள்ளி தலைமையாசி ரியர் அல்லி மற்றும் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் உட்  பட பலர் கலந்து கொண்ட னர்.  முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் நன்றி கூறினார்.