districts

தமிழ்ப் பல்கலை.யில் கல்வி நிலை ஆய்வு  இயக்ககம் துவக்கம்

தஞ்சாவூர், பிப்.12 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று கல்விநிலை ஆய்வு இயக்ககம் தொடங்கி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.திரு வள்ளுவன் தொடங்கி வைத்தார்.  இக்கல்வி நிலை ஆய்வு இயக்ககம் மூலம் தமிழ்ப்  பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து ஆய்வுகளை யும் நெறிப்படுத்தி அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் இந்த  புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆராய்ச்சிக்கு முன் வரும் மாணவர்களுக்கு பல்கலைக்கழ கம் வழியாக உதவிடும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதுவரை உருவாக்கப்படாத புதியதொரு அமைப்பாக, ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த இயக்ககம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இயக்ககத்தின் இயக்குனராக பேராசிரி யர் முனைவர் தேவி, இணை இயக்குனராக முனைவர் வி. செல்வக்குமார் செயல்படுர். இத்தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் க.சங்கர், கல்வி யாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.