districts

கிராம மக்கள் நலம்பெற இசிஜி மையம் தொடக்கம்

தஞ்சாவூர், பிப்.10- தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆவணம் பெரியநாயகி புரம் ஊராட்சியில், பொதுமக்கள் பயன்பாட்டிற் கான நவீன இசிஜி மையம் வியாழனன்று தொடங்கி வைக்கப்பட்டது.  இம்மையத்தை, பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அன்சத் நிஷா அபுபக்கர் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில், கிராம சுகாதார செவிலியர் மரகதம், ஆவணம் ரியாஸ், பொறியாளர் பன்னீர் செல்வம், கணேசன், அடைக்கலம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், தையல்நாயகி, மீனாட்சி, ஊராட்சி செயலாளர் சங்கீதா உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துவக்க நாளன்று நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும் ரத்த அழுத்தப் பரிசோத னை, சர்க்கரை அளவு பரிசோதனையும் இலவச மாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமன் கூறுகையில், ‘‘ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஒரு பகுதியில், கிராம தன்னார்வலர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு, இசிஜி இயந்திரம், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.  

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் குமார் ஆலோசனையின்படி, வட்டார மருத்துவ அலுவ லர் டாக்டர் வி.சௌந்தரராஜன் மேற்பார்வையில், செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தினசரி வந்து மருத்துவ பரிசோ தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் எங்கள் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்துகி றோம். முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் மாரடைப்பு, சர்க்கரை நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்படும்’’ என்றார்.  ஊராட்சி மன்ற தலைவரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.