districts

img

ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் துவக்கம்

தஞ்சாவூர், மார்ச் 9 - தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் அமைச் சர் பசுபதி குமார் பராஸ், ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை இணைய வழியில் துவங்கி வைத்தார். தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்கான சிறப்பு  விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சியை உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் இணைய மைச்சர் பிரஹலாத் சிங் படேல் துவங்கி  வைத்தார். நிகழ்ச்சியில் தொடக்க உரை யாற்றிய தேசிய உணவு தொழில்நுட்பம்,  தொழில் மேம்பாடு மற்றும் மேலா ண்மை நிறுவனத்தின் இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் கூறுகையில், “தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம், இந்திய  அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள்  அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு  ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவன மாகும். உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்ப தோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர் களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்ள பயிற்சி கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி  வருகிறது.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங் களை மேம்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்ய, தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் வளாகத் தில் வெப்பம் சாரா உணவு பதன தொ ழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை ரூ.10  கோடி மதிப்பீ்ட்டில் உருவாக்கியுள்ளது. இது ஆசியாவின் முதல் மேம்பட்ட ஆராய்ச்சி வசதியாகும். இந்த மையத் தில் உலகத்தர ஆராய்ச்சி வசதிகளான கோல்டு பிளாஸ்மா (cold plasma), அல்ட்ரா சவுண்ட் (ultrasound), அதிக  அழுத்தமுறை (High pressure proce ssing), கதிரியக்க தொழில்நுட்பம் மற்றும் ஓசோன் தொழில்நுட்பம் அடங்கிய ஆராய்ச்சி வசதிகள் நிறுவப் பட்டுள்ளன.   உணவு பொருட்களின் தரம் மற்றும்  ஆயுட்காலத்தை வெப்பம் சாரா தொழில்  நுட்பத்தின் மூலம் அதிகரிப்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். கூடுதலாக, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஆதரவுடன், இந்த சிறப்பு  மையத்தில் உணவு கதிர்வீச்சு அலகும்  அமைக்கப்படும். மேலும், வெப்பம் சாரா தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி களை இந்த மையம் அளிக்கும்” என்றார். தொடர்ந்து, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சர் பசுபதிகுமார் பராஸ் இந்த மையத்தையும், புதிதாக கட்டப்பட்ட நிறுவனத்தின் நுழைவு வளைவையும் திறந்து வைத்து உரையாற்றினார். இணைய வழியில், உணவு பதப்ப டுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் சிறப்புரையாற் றினார். நிறைவாக உணவு பதப்படுத்து தல் தொழில்கள் அமைச்சகத்தின் இணை செயலர் மின்ஹாஜ் ஆலம் நன்றி  கூறினார்.