districts

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பேராவூரணி, ஜன.30-  தமிழ்நாடு அரசு நடத்திய கலைத் திருவிழாவில் தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பங் கேற்று பதக்கங்களை பெற்றனர்.  பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு சேது பாவாசத்திரம் அரசு உயர் நிலைப்பள்ளி பள்ளி மேலா ண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில்  பாராட்டு விழா நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சரவணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கென் னடி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகஜோதி செந்திலதிபன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பாவா, பெற்றோர்  ஆசிரியர் கழகத் தலைவர்  ராஜமாணிக்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.