குடவாசல், மார்ச் 5 - குடவாசல் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற தலைவர் - துணைத் தலைவர் தேர்தலில் பேரூ ராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சார்ந்த 7 ஆவது வார்டு உறுப்பினர் மகா லெட்சுமி முருகேசன் மற்றும் 10 ஆவது வார்டு உறுப்பி னர் கே.குணசேகரன் பேரூ ராட்சி துணை தலைவ ராக போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டனர். போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களை சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல் திமுக ஒன்றிய செயலாளர் பா.பிரபாகரன், பேரூர் கழகச் செயலாளர் ஆர்.முருகே சன், சிபிஎம் ஒன்றிய செயலா ளர் ஆர்.லெட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக் கோரியா, டி.ஜி.சேகர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர்.