districts

img

ஒற்றையடி பாதையாக மாறிய குடமுருட்டி முக்கிய சாலை அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

அய்யம்பேட்டை, ஜூன் 12 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலை முக்கியமான சாலை யாகும். இந்த சாலையில் குடமுருட்டி, காவிரி ஆற்றின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன. குட முருட்டி ஆற்றின் மீதுள்ள பாலம் சுமார் 50 ஆண்டு களை கடந்தது. இந்த பாலம் அருகே உள்ள சாலை  சரிந்து விழுந்ததால் கணபதி அக்ரஹாரம் - அய்யம் பேட்டை சாலை துண்டிக்கப்பட்டது.  இந்த பாலத்தை மாகாளிபுரம், கணபதி அக்ர ஹாரம், வீரமாங்குடி, ஈச்சங்குடி, மணலூர், கோவிந்த நாட்டுச்சேரி, இலுப்பக் கோரை, உள்ளிக் கடை, பெருமாள்கோயில் உள்ளிட்ட பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் வழியே தஞ்சையிலிருந்து இளங்கார்குடி, இலுப்பக்கோரை உள்ளிட்ட கிரா மங்களுக்கு 2 அரசு பேருந்துகளும், 3 மினி பேருந்துகளும் சென்று வந்தன. திருவையாறு -  கும்பகோணம் சாலை பகுதியில் உள்ள ஊர் களுக்கு செல்லும் அவசரகால ஆம்புலன்ஸ், தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், அய்யம் பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து பள்ளி, கல்லூரி  வாகனங்கள் தினமும் இந்த பாலத்தின் வழியே சென்றுதான் மாணவ-மாணவிகளை அழைத்து வரு கின்றன. வடபகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயி கள், தொழிலாளர்கள் இந்த பாலத்தின் வழியே  தாங்கள் விளைவித்த பொருட்களை நகரங்களுக்கு  கொண்டு சென்று வருகின்றனர்.  இந்நிலையில் பழமையான பாலம் பழுதடைந்த தால், இதன் அருகிலேயே புதிய பாலம் ஒன்று  கட்டப்பட்டு வருகிறது. புதிய பால கட்டுமானப் பணி களின்போது பழைய பாலத்தின் வடக்குப்புறம் உள்ள சாலை, கடந்த 10 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து விழுந்தது.

இதனால் ஆட்டோ,  கார், வேன், பேருந்து போன்ற வாகனங்கள் பாலத்தில்  செல்ல முடியாமல் இச்சாலை ஒற்றையடி பாதை  போன்று மாறிவிட்டது.  இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்த  நிலையில், ஞாயிறன்று மாலை இந்த சாலை முற்றி லும் இடிந்து விழுந்துவிட்டது. இதனால் அய்யம் பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு முற்றிலும் முடங்கி போ னது.  இந்த சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள், தற்போது அவசர தேவைகளுக்கு இருசக்கர வாக னங்களில்கூட அய்யம்பேட்டைக்கு வர முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் வரும் வடக்கு  பகுதி கிராம மக்கள், பல கிலோ மீட்டர் சுற்றி பாப நாசம் அல்லது திருவையாறு சென்றுதான் அய்யம் பேட்டைக்கு வர வேண்டியுள்ளது. திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், சரிந்து விழுந்த  பள்ளத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து  சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்  என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இந்த சாலை லேசாக சரிய ஆரம்பித்தபோதே, அதிகாரிகள் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆற்றில் தண்ணீர் வந்த பிறகும், இந்த பகுதியில் இயந்திரங்களை கொண்டு கட்டு மானப் பணிகளை தொடர்ந்ததால்தான், சாலை முற்றிலும் சரிந்து போனதாக அப்பகுதி பொதுமக்கள்  குற்றம்சாட்டுகின்றனர்.