தஞ்சாவூர், அக்.31 - தஞ்சை நால்வர் வழி வந்த கே.பி. கிட்டப்பா பிள்ளையின் 16 ஆவது நினைவு நாட்டிய விழா தஞ்சாவூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தி னராக மதுரா தொகுதி மக்க ளவை உறுப்பினரும், இந்தி திரைப்படக் கலைஞருமான ஹேமமாலினி கலந்து கொண்டார். கலைமாமணி விருது பெற்ற நந்தினி ரமணி, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போ ன்ஸ்லே, தமிழ்ப் பல்கலைக் கழக இசைத் துறைத் தலை வர் ஆர்.மாதவி, முனைவர் இராம. கவுசல்யா, பூர்ணிமா குருராஜன், முனைவர் எஸ்.திவ்யசேனா, கிட்டப்பா நாட்டியாலயாவின் கே.பி.கே. சந்திரசேகரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கிட்டப்பா நாட்டியாலயாவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், திவ்யாஞ்சலி இயக்குநர் எஸ்.திவ்யசேனா குழு வினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.