கும்பகோணம், ஜன.25- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில், பண்பாட்டு கலாச்சாரத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு கல்வியோடு விளை யாட்டையும் கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர் களுக்கு தமிழர் விளையாட்டான தாயம் விளையாடும் போட்டி, தஞ்சை மாவட்ட அள விலான பள்ளி கேம்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோ சியேசன் மற்றும் கார்த்தி வித்யாலயா பள்ளி இணைந்து நடத்தின. இதில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகாபதி ஆகியோர் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினர்.