தஞ்சாவூர், ஜூலை 18- தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” என்ற சிறப்பான திட்டத் தினை, கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினால் தமிழகத்தில் வசிப்ப வர்கள் மட்டுமல்லாமல், உலகமெங்கும் வசிக் கும் நபர்கள், தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டால் இத்திட் டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளதால் இத்திட்டமா னது இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு முன்மாதிரியான திட்டமாக திகழ்கிறது. இத்திட்டத்தின் கீழ் சாலை விபத்தி னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும். தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப் பட்ட 215 அரசு மருத்துவமனைகள் மற்றும் 475 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 640 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப் பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கி வரு கிறது. மேலும் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், “தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகிய வற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவ ராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின் வரும் மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச் சைகள் வழங்கப்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப் பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந் தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச் சையை கட்டணமில்லாமல் தொடரலாம். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத் தியோ சிகிச்சை பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொட ரலாம். ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டி யலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து விவரங்களை மருத்துவமனை, அவசர கால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகத் தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டுள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விவ ரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத் தில் இதுவரை ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 5 அரசு மருத்துவமனை கள் மற்றும் 19 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 25 மருத்துவமனைகளில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்து களால் பாதிக்கப்பட்ட 3192 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயன்பெற்றுள்ள னர்.
தொகுப்பு
க.பிரேமலதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்.