districts

img

நகரங்களின் தூய்மைக்கான சிறப்பு தூய்மைப் பணி துவக்கம்

தஞ்சாவூர், ஜூன் 11 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் நகராட்சி சார்பில் நகரங் களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சிறப்பு தூய்மைப் பணி விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதனை நகர்மன்றத் தலைவர் சண்முகப் பிரியா செந்தில்குமார் தலைமை வகித்து  தொடங்கி வைத்தார்.  இதையொட்டி, பாசன வாய்க்கால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், பட்டுக் கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாண வர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ற னர். 

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  நகரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ஆலோசனைப்படி, அறந்தாங்கி  நகராட்சி தூய்மையான நகரங்களுக் கான மக்கள் இயக்கத்தை, நகர கலை ஞர் பேருந்து நிலையம் மற்றும் அவுலியா  நகரில் நகர்மன்றத் தலைவர் திமுக நகரச்  செயலாளர் இரா.ஆனந்த் துவங்கி வைத் தார். நகராட்சி ஆணையர் லீமா சைமன்,  நகராட்சி பொறியாளர் திருச்செல்வம், சுகாதார அலுவலர் நாட்ராயன், சுகாதார  ஆய்வாளர் சேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.