தஞ்சாவூர், செப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, ஆம்பலாப்பட்டு கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் மறைந்த பஞ்சாயத்து என்ற சின்னை யன் படத்திறப்பு, கல்வெட்டு திறப்பு, கொடியேற்று, புகழஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடை பெற்றது. தோழர் சின்னையன் கட்சியின் ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு பகுதியின் ஆவார். இப்பகுதியில் கட்சி வளர்ச்சி க்கு அரும்பாடுபட்டவர். கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினராகவும், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளராகவும் திறம்பட பணி யாற்றியவர். இப்பகுதி மக்களின் நம்பிக்கையை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர். சாதிய வேறுபாடுகளை கடந்து, மக்கள் ஒற்றுமைக்கு அரும் பாடுபட்டவர். ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் தன்னிகரில்லா தலைவராக இருந்த அவர் கடந்த, ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார். இதையொட்டி அவரது படத்திறப்பு, கல்வெட்டு திறப்பு, கொடியேற்று நிகழ்ச்சி, ஒரத்தநாட்டை அடுத்த ஆம்பலாப்பட்டில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கல்வெட்டு, படத்தை திறந்து, கொடியேற்றி வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.மனோ கரன், எம்.செல்வம், என்.சுரேஷ்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்த ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் மோகன்தாஸ், கிளைச் செயலாளர் இளங்கோ, கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அவரது சகோதரர் வழக்குரைஞர் கோவிந்தராஜ், மகள்கள் கியூபா ராணி, ரஷ்யா மணி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.