districts

img

பேராவூரணி பேரூராட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர், பிப்.3-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பேராவூரணி பேரூ ராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  பேராவூரணி நகருக்கான தேவைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல் மற்றும் உறுப்பினர்க ளுடன் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.  இதில், குடிநீர், மின்சாரம், வடிகால், பேருந்து, தெருவிளக்கு, பொது விநியோ கத் திட்ட விற்பனை அங்காடி, பள்ளி  சுற்றுச்சுவர், மயானக்கூரை அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரி டம் வலியுறுத்தினர். முன்னதாக பேரூராட்சி அலுவலக கோப்புகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.  இதேபோல், பெருமகளூர் பேரூராட்சி அலுவலகத்திலும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சுந்த ரத்தமிழ் ஜெயபிரகாஷ் மற்றும் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  ஆய்வில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கோ.கனகராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பா.பழனிவேல் (பேராவூரணி), புனிதவதி (பெருமகளூர்), பேராவூரணி வட்டார வளர்ச்சி அலு வலர்கள்  செல்வேந்திரன், தவமணி,  வட் டாட்சியர் சுகுமார், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.