districts

img

ஜூலை 31-இல் 2 ஆயிரம் கிராமங்களில் ஒன்றிய பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 27- தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிரா மங்களில் ஜூலை 31 ஆம் தேதி  பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது என ஐக்கிய விவசாயி கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் மாநில பொதுக்  குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்  பட்ட முடிவுகள் குறித்து முன்னணி யின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:

ஒன்றிய அரசு 2 மாநிலங்களுக் கான பட்ஜெட்டை தாக்கல் செய் துள்ளது. விவசாயிகளுக்கு எதி ரான இந்த பட்ஜெட் நகலை நாடு  முழுவதும் எரிக்கும் போராட்டத் துக்கு ஐக்கிய விவசாயிகள் முன் னணி அறைகூவல் விடுத்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம்  கிராமங்களில் ஒரு லட்சம் விவசாயி கள் பங்கேற்கும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை ஜூலை 31 ஆம் தேதி நடத்துவது என முடிவு  செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9 அன்று ‘வெள்ளை யனே வெளியேறு’ நாளை கடைப்  பிடிக்கும் விதமாக ‘கார்ப்பரேட்டு களே இந்தியாவை விட்டு வெளி யேறு’ என்ற கோரிக்கையை முன்  வைத்து மாநிலம் முழுவதும்  மாவட்ட, வட்டத் தலைமையிடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இயற்கையைப் பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 17 அன்று தூத்துக்குடி, சேலம், திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் கருத்தரங் கம் நடத்துவது என முடிவு செய் யப்பட்டது.

இந்தப் போராட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் ஆத ரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கி றோம். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுச்  செயலாளர்கள் பி.எஸ். மாசிலா மணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பு), சாமி. நடராஜன் (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு), அகில இந்திய கிசான் மகா சபா  சந்திரமோகன், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கப் பொதுச்  செயலர் அமிர்தலிங்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.