தஞ்சாவூர், ஏப்.9- பட்டுக்கோட்டையில் 10-ஆம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த மருத்து வர் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கீழப்பா ளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (46). இவர் வடசேரி சாலை, பள்ளிவாசல் தெரு பகுதியில் உரிய அனுமதி யின்றி மருத்துவம் பார்த்து வருவதாக புகார் வந்தது. இதுகுறித்து பட்டுக் கோட்டை அரசு மருத்துவ மனை மருத்துவர் சீனிவாசன் பட்டுக்கோட்டை நகர் காவல் துறையில் புகார் கொடுத் தார். இதையடுத்து காவல் துறையினர் பள்ளிவாசல் தெரு பகுதியில் செயல்பட்ட மருத்துவமனையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தனபால் மருந்துக்கடை வைத்தும் மற்றும் ஆங்கில மருத்துவ உபகரணங் களைக் கொண்டு மக்க ளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரி டம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனபால் 10- ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்ததும், மக்க ளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மருத்துவமனை செயல்பட்டு வந்த இடத் திற்கு சீல் வைத்த காவல்து றையினர், தனபாலை கைது செய்தனர். மேலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மத்திய மண்ட லத்தில் உள்ள ஒன்பது மாவட் டங்களில் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோத னையில் திருவாரூர் மாவட் டத்தில் 10, தஞ்சாவூரில் 5, புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் தலா 4, பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர் கைது செய்யப் பட்டனர். மத்திய மண்டலத்தில் சுகாதாரத் துறைக் குழுக்களு டன் இணைந்து நடத்தப் படும் சோதனைகள் தொட ரும். முறைப்படி படிக்காமல் மருத்துவம் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் ஞாயிறன்று காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.