districts

img

பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதியை மேம்படுத்துவேன் அம்மாபேட்டை 5 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் வ.ரவி வாக்குறுதி

தஞ்சாவூர், பிப்.9 - தஞ்சை மாவட்டம் அம்மா பேட்டை பேரூராட்சி 5 ஆவது வார்டில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், அரி வாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத் தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் வ.ரவி, சிபிஎம் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி யினருடன் இணைந்து தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்.  அப்போது அவர் பொதுமக்களி டம் வாக்குகள் சேகரித்து பேசுகை யில், “அம்மாப்பேட்டை 5 ஆவது வார்டில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்தித் தருவேன். மிக வும் அடித்தட்டு நிலையில் வாழ்ந்து வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப் பாடுபடு வேன். ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை மேம்படுத்துவேன். விவசா யத் தொழிலாளர்கள், பட்டியலின மக்கள் பயன்பெறும் வகையில் நூறு  நாள் வேலைத் திட்டத்தை அம்மாப் பேட்டை பேரூராட்சிக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன்” என வாக்கு றுதி அளித்து தேர்தல் பணியில் ஈடு பட்டார்.  அவருடன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பி ராஜன், விவசாயிகள் சங்க ஒன்றியச்  செயலாளர் கே.முனியாண்டி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் கள் மயில்வாகனன், தனம், வாலிபர்  சங்க ஒன்றிய செயலாளர் யு.சரவ ணன் மற்றும் கிளைச் செயலாளர் கள், நகரக்குழுவினர் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.