districts

பட்டு விலையை குறைக்கக் கோரி பட்டினிப் போராட்டம்

கும்பகோணம், மார்ச் 1 - வரலாறு காணாத பட்டு விலை உயர்வை  கண்டித்து தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்ட உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஜவுளி தயாரிப்பாளர் சங்க நிர்வாகி கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற் றது. தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சிறப்பாக இருந்த பட்டு கைத்தறி நெசவுத்தொழில், ஒன்றிய அரசின்  ரக ஒதுக்கீடு, ஜிஎஸ்டி வரி போன்ற பிரச்ச னைகளால் நலிவடைந்து வருகிறது. கடந்த காலங்களில் கும்பகோணம், தாராசுரம், திருபு வனம், பட்டீஸ்வரம், அம்மாபேட்டை, அய்யம் பேட்டை, கதிராமங்கலம், துகிலி, திருநாகேஸ் வரம் போன்ற 32 ஊர்களுக்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கைத்தறி தொழிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலை செய்து வந்தனர். தற்போது பத்தாயிரம் தறியாக குறைந்த தோடு 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் தொழிலை விட்டுவிட்டு, வயிற்றுப் பிழைப்புக் காக கட்டுமானம், சமையல் வேலை உள்ளிட்ட  மாற்று தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கடந்த வருடம் பட்டு  தொழிலுக்கு அடிப்படையான மூலப்பொரு ளான கோரப்பட்டு கிலோ ரூ.3500-க்கு விற்றது  தற்போது ஒரு கிலோ ரூ.7500 என்ற அள விற்கு விலை உயர்ந்துள்ளது.  இதனால் தொழில் மேலும் மேலும் நலி வடைந்துள்ளது. செயற்கையான விலை உயர்வு ரிலையன்ஸ் மற்றும் சில தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் திட்டமிட்டு ஏற்றப் படுகிறது.  கோரப்பட்டு புழு போன்றவற்றை முதலாளிகள் கொள்முதல் செய்து பதுக்கி  வைத்து பட்டிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்திய தால்தான் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து குடிசைத் தொழிலான பட்டு கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண் டும். தேவையான பட்டினை வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்து தர வேண்டும்.  அரசே கொள்முதல் செய்து நெசவாளர் களுக்கு வழங்க வேண்டும். விவசாய உற்பத் திக்கு மானியம் வழங்கப்படுவது போல் கோரப்பட்டிருக்கும் மானியம் வழங்க வேண் டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் இரண்டாவது வாரத்தில் கும்பகோணத்தில் பெருந்திரள் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.