districts

img

தஞ்சையில் கனமழை ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சாவூர், நவ.3-  தஞ்சாவூரில் புதனன்று இரவு வெளுத்து வாங்கிய மழையால், ஆயி ரக்கணக்கான ஏக்கரில், பயிரிடப்பட்டி ருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிய தால் விவசாயிகள் வேதனை அடைந்  துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்நிலையில் தஞ்சா வூர் மாவட்டத்தில் புதனன்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.  இதனால் அதிகபட்சமாக தஞ்சா வூரில் 177.50 மி.மீட்டர் அளவிற்கும், குறைந்தபட்சமாக நெடுவாசல் தென்  பாதியில் 72.60 மி.மீட்டர் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 409.90 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர்மழை காரணமாக குளிச்சப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டா ரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட ஆயிரக்க ணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  மேலும், வியாழன் மதியம் முதல் பெய்த மழையால், வயல்களில் இருந்து  தண்ணீர் வடியாததால், இளம் பயிர்  கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித் துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் கூறுகையில், குளிச்சப்பட்டு உள்  ளிட்ட பகுதிகளில், வடிகால் வாய்க்கால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக  தூர்வாரப்படாமல் உள்ளதால், ஒவ் வொரு முறையும் மழையின் போது, தண்ணீரில் பயிர்கள் மூழ்கி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது அரசு இப்  பகுதியில் கணக்கெடுப்பு நடத்திய, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்க ருக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், வடிகால் வாய்க்காலை முறையாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஆட்சியர் பார்வையிட்டார் 
கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகளிடம் தண்ணீர் வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரி களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.