districts

சுகாதார மன்றக் கூட்டம்  

தஞ்சாவூர், அக்.7 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மருங் கப்பள்ளம் ஊராட்சியில், சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதார மன்றக்  கூட்டம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் தலை மையில் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலை வர் மு.கி.முத்துமாணிக் கம், வட்டார வளர்ச்சி  அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்டக் குழு,  ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் மீனாம்பாள் சுப்பிரமணியன் மற்றும்  ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப் படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.