districts

மாரியம்மன் கோவிலில் சுகாதார வளாகம் அமைத்துத் தரப்படுமா? ஆர்ப்பாட்டம் நடத்த சிபிஎம் முடிவு

தஞ்சாவூர், ஜூன் 4-  தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் கழிப்பறையுடன்கூடிய, சுகாதார வளாகம் அமைத்துத் தரக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் மாரியம்மன் கோவில் சிபிஎம் கிளைக் கூட்டம் ஈ.டி.எஸ். மூர்த்தி தலை மையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.முனியாண்டி பேசினர். இக்கூட்டத்தில், “தமிழக அளவில்  மிகவும் பிரசித்தி பெற்ற பல்லாயிரக்கணக் கானோர் வந்து செல்லும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் கழிப்பறை, குளியலறை இல்லாமல் பக்தர்கள், பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படு கின்றனர். எனவே, கோவில் பகுதியிலும், பேருந்து நிலையம் அருகிலும் சுகாதார வளா கம் அமைத்து தர வேண்டும். நீண்ட கால மாக, பணியாளர்கள் இல்லாமல் மூடிக்கிடக் கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உட னடியாக திறந்து செயல்படுத்த வேண்டும்.  பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள வேறிடத்திலிருந்து மாரி யம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட  மதுக்கடைகயை உடனே மூட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் 8 (புதன்கிழமை) மாரியம்மன் கோவில்  அருகில் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம்  நடத்துவது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.