பாபநாசம், பிப்.3- ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நிய மிப்பதற்கான உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்து ரையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம், வழக்குரைஞர் விக்டோரியா கௌ ரியை ஜனவரி 17-ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது. யூடியூப் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை வழக்குரைஞர் விக்டோரியா கௌரி மேற்கொண்டிருக்கிறார். இவர் பேச்சுகளும் எழுத்துகளும் வகுப்புவாத மோத லை தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளதால் அவர் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். விக்டோரியா கௌரியின் பிற்போக்குத்தனமான கருத்துக்கள், அடிப்படை அரசியலமைப்பு விழுமி யங்களுக்கு முற்றிலும் எதிரானது. இதன் அடிப்படையில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தகுதியற்றவர் என்று முன்னணி வழக்குரைஞர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து மூத்த வழக்குரைஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், வைகை, வி.சுரேஷ் உள்ளிட்ட 21 வழக்குரை ஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் மூன்று முக்கிய நீதிபதிகளுக்கு தனித்தனியாக தங்கள் பரிந்துரைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர். எனவே, வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.