districts

img

சூரப்பள்ளம் கிராமத்தில் தூக்குத் தேர்த் திருவிழா

தஞ்சாவூர், மே 13 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத் தில் 400 ஆண்டுகள் பழமை  வாய்ந்த சூரமகாகாளி யம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த  சில தினங்களாக நடை பெற்று வருகிறது.  பத்தாவது நாளான வியா ழக்கிழமை தூக்குத் தேர்த் திருவிழா நடைபெற்றது. கோயிலுக்கு சொந்தமான அலங்கரிக்கப்பட்ட தேரை கீழத்தெரு, நடுத்தெரு, மேலத் தெரு, கட்ட வேளாளர் தெரு உள்ளிட்ட 4 தெருக்களைச் சேர்ந்த பக்தர்கள் தோளில் சுமந்தவாறு அங்குள்ள கோவில் குளக்கரையைச் சுற்றி வந்தனர். மற்ற இடங் களில் உள்ளது போல இங்குள்ள தேருக்கு சக்கரம் கிடையாது. அதனால் தேரை  வடம் பிடித்து இழுக்காமல், இருபக்கமும் வலுவான கம்பியில் தேரை அலங் கரித்து இருபக்கமும் பக்தர் கள் தோளில் சுமந்தவாறு கோயில் அருகே உள்ள குளத்தை சுற்றி வலம் வந்து  மீண்டும் கோவில் முன்பு தேர்  வந்து சேரும். இந்த பிரபலமான தூக்குத் தேரோட்டத்தை காண,  உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.