தஞ்சாவூர், மே 4- தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, மேய்ச்சலுக்காக இராமநாதபுரத்திலிருந்து ஆட்டு மந்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது பெரும்பா லான இடங்களில் அறுவடைப் பணிகள் நிறை வடைந்துள்ளது. இந்நிலையில் மேய்ச்சலுக்காகவும், கிடை போடுவதற்காகவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆடு வளர்ப்போர் தஞ்சை மாவட்டத் திற்கு வருகை தந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாகுபடிப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வயல்களில் கோடை உழவு நடை பெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வயல்கள், ஆற்றங்கரை, ஏரிக்கரை ஓரங்களில் பசும்புல் செழித்து வளர்ந்துள் ளது. இவற்றில் ஆடுகளை பகல் நேரங்களில் மேய்ச்சலுக்கு விடும் ஆடு வளர்க்கும் விவசாயிகள், இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள வயல்களில் கிடை போடுகின்றனர். வயல்களின் உரிமையாளர்களிடம் இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கூலியாக பெற்றுக் கொள்கின்ற னர். 500 ஆடுகள் கொண்ட ஒரு மந்தைக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. கிடை போடுவதால் ஆட்டின் கழிவுகள் வயலுக்கு நல்ல இயற்கை உரமாக மாறுகிறது. இதனால் விவசாயி களும் கிடை போடுவதை விரும்புகின்றனர். இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டம் டி.கிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்த ஆடுகள் வளர்க்கும் ராமசாமி என்பவர் கூறுகையில், “நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு வளர்ப்போர், எங்கள் ஆடுகளை லாரி மூலம் ஏற்றிக் கொண்டு வந்து, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு, பகல் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்குவிட்டு இரவு நேரங்களில் வயல்களில் கிடை அமைத்து வருகிறோம். ஆடுகளைக் கொண்டு கிடை அமைக்கும் போது வயலுக்கு சத்தான இயற்கை உரம் கிடைக்கும். மண் ணின் வளம் மேம்படும். இரவில் ஆடுகளை பட்டி அமைத்து ஒரே இடத்தில் தங்க வைப்பதால்ஆடுகளின் சிறுநீர், புழுக்கை வயலுக்கு நல்ல உரமாகிறது. ‘‘ஆட்டுக்கிடை அமைத்தால் அந்த ஆண்டே பலன், மாட்டு கிடை அமைத்தால் மறு ஆண்டே பலன்” என்பது சொலவடை. தஞ்சை மாவட்டத்தில், அறுவடைக் காலம் தொடங்கியவுடன் ஆடுகளை கிடை போடுவதற் காக கொண்டு வருகிறோம். சில விவசாயிகள் வயலில் இரண்டு, மூன்று நாள் கிடை போடச் சொல்வார்கள். அதேபோல வியாபாரிகளுக்கு, வளர்ந்த ஆடுகளை யும் விற்பனை செய்து வருகிறோம். ஆடு மேய்க்க ஆட்கள் கிடைப்பது தற்போது பெரும் தட்டுப்பாடாக உள்ளது. தற்போது கடும் வெயில் கொளுத் தும் சூழலிலும், பிழைப்புக்காக ஆடுகளை மேய்த்து வருகிறோம். மார்ச் மாதம் தொடங்கி டெல்டா பகுதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் காலமான ஜூன் மாதம் முதல் வாரம் வரை, விவசாயிகள் கிடை போடச் சொல்வார் கள். அதன் பிறகு எங்கள் பகுதிக்கு ஆடுகளை கொண்டு செல்வோம்’’ என்றார். - எஸ்.ஜகுபர்அலி