districts

விவசாயிகளின் இடத்திற்கே சென்று 2 மெட்ரிக் டன்  நெல் கொள்முதல்

 பாபநாசம் மார்ச் 22-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சார்பில் அய்யம்பேட்டை அருகே உள்ள சரபோஜி ராஜபுரத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் ‘பார்ம் டிரேடிங்’ எனப்படும் விவசாயி களின் இருப்பிடத்திற்கே சென்று (இ-நாம்) சுமார் 2 மெட்ரிக் டன் கருப்பு கவுனி நெல் கொள்முதல் செய்யப் பட்டது. இதன் மதிப்பு ரூ.62,370.  இதில் மூட்டை ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.1900/-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.1800/-க்கும் பரிவர்த்தனை நடைபெற்றது. இதில் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சா யிணி, வேளாண்மை அலுவலர் தாரா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.