பேராவூரணி, ஜன.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட பள்ளி வளர்ச்சிக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக பள்ளி அருகிலேயே தனிநபர் ஒருவரிடம் இருந்து 6 செண்ட் இடம் வாங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொன்னாங்கண் ணிக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு நன்கொடை திரட்டும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் லதாஸ்வரி தலை மையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் சேகர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணே சன், வளர்ச்சிக்குழு தலைவர் வி.என்.பக்கி ரிசாமி, மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா, துணைத் தலைவர் மருத்துவர் அருண் சுதேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பள்ளிக்கு இடம் வாங்க நிதியுதவி செய்த நன்கொடையாளர்கள் தொழிலதிபர் எஸ்.கந்தப்பன், லண்டன் ஸ்டீல் கனி, மருத்துவர் துரை.நீலகண்டன், மருத்துவர் பிரேமலதா - விவேகானந்தன், மருத்துவர் சரண்யா - ரஞ்சித், மல்லிகை சிதம்பரம், பொறியாளர்கள் ஏ.சி.சி.ராஜா, துரையரசன், சரவணன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன், எம். செந்தில்குமார், சாகுல் ஹமீது மற்றும் பள்ளிக்கு இடம் விற்பனை செய்த வீரப்பன் ஆகியோரை பாராட்டி பொன்னாடை அணி வித்து கவுரவிக்கப்பட்டனர். பள்ளிக்கு இடம் வாங்க உதவ விரும்பு வோர் பள்ளி தலைமை ஆசிரியர் லதாஸ்வ ரியை 9442233701 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.