தஞ்சாவூர், மார்ச்.6- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அரசுப் பணி வாய்ப்பினை கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெற்றிடும் வகையில், அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவக்க விழா சனிக்கிழமை நடை பெற்றது. இதனை பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். அப்போது அவர் கூறியதா வது, ‘‘கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக பெரு நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய நிலையில், பலரும் அரசுப் பணி வாய்ப்பை தவற விடும் நிலை தொடர்கிறது. படித்த பட்டம் பெற்ற இளை ஞர்களின் கனவு அரசுப் பணி களின் சேர்வதுதான். நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளுக்கென்று பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பல ஆயிரக்கணக் கில் பணம் செலவு செய்து பயிற்சி மேற்கொள்ள வேண்டி யிருப்பதால், ஏழை, எளிய மாண வர்கள் இந்தப் பயிற்சிகளைப் பெற முடியாமலும், அரசுப் பணி வாய்ப்பு கிடைக்காமலும் உள்ள னர். இதைக் கருத்தில் கொண்டு பேராவூரணியில் ‘’திருவள்ளு வர் போட்டித் தேர்வுப் பயிற்சிக் கூடம்’’ சமூக ஆர்வலர்களால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தில் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு நடத்தக் கூடிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி கள் வழங்கப்பட உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வு களில் வென்று, தற்போது அரசுப் பணியில் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியினை கட்டணமின்றி நடத்த உள்ளனர். இந்தப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர் களுக்கு என்னுடைய சொந்த செலவில் வர்த்தகர் சங்க மண்ட பம் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து தருகிறேன்” என என். அசோக்குமார் எம்எல்ஏ உறுதி யளித்தார். இந்த நிகழ்ச்சியில் பேராவூ ரணி வட்டாட்சியர் த.சுகுமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சி யரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், நில அளவை வட்ட சார் அலுவலர் சந்தோஷ், மருத்து வர் நீலகண்டன், தமிழ்நாடு அறி வியல் இயக்கம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முத்துக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு பேசி னர்.