districts

மோசடியான ஆட்சேர்ப்பு தகவலை நம்பி ஏமாற வேண்டாம் ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 10-  கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு என்ற மோசடியான தக வலை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேரம் பயிற்சி அளித்து, ரூ.15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் சம்பளத்தில் ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் எனவும், ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் மோசடியான தகவல் புலனம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பரவி வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி பொது மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்’’  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.