districts

மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர், மார்ச் 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்தி ரம் ஒன்றியக் குழு கூட்டம், பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச் சாமி தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.வாசு, மூத்த தோழர்  வீ.கருப்பையா, ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள் ஆகியோர் பேசினர்.  இக்கூட்டத்தில், மாவட்டக் குழு முடிவுகள் குறித்தும், மதுரையில் நடை பெற உள்ள மாநில மாநாட்டு பணிகள் குறித்தும், தீக்கதிர் சந்தா சேர்த்தல், துணைக் குழு அமைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில மாநாட்டையொட்டி, கிளை கள் தோறும் கொடியேற்று வது, விளம்பரத் தட்டி வைப் பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் கழுமங்குடா ஐஸ்வாடி மீனவர் குடியிருப்பு பகுதிக்கு, சமாதானப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி மின் இணைப்பு வழங்காத அதிகாரிகளைக் கண்டித்து, மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு, விரைவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.