தஞ்சாவூர், ஜன.2- படித்த வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கிய தமிழ்நாடு முதல மைச்சருக்கு தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நன்றி தெரி வித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலை வாய்ப்பினை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத் தினை மேம்படுத்துகின்ற வகையில் எண்ணற்ற வேலை வாய்ப்பு சார்ந்த திட்டங் களை செயல்படுத்தி வருகிறார். மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, 2006-ஆம் ஆண்டு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்தாண்டு களுக்கு மேலாக வேலை வாய்ப்பிற்காக காத்திருப் போருக்கு 3 ஆண்டுகளுக் கும், மாற்றுத்திறனாளி எனில் குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருந்தால் 10 ஆண்டுகளுக்கும் அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து தஞ் சாவூர் மாவட்ட ஆட்சித் தலை வர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத் தில், படித்த வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பத் தாம் வகுப்பு தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்த 23 நபர்களுக்கு காலாண்டிற்கு (3 மாதங்கள்) தலா ரூ.600 வீதம் 6 காலாண்டிற்கு ரூ. 69,000, பத்தாம் வகுப்பு தேர்ச்சி யினை பதிவு செய்த 186 நபர் களுக்கு காலாண்டிற்கு தலா ரூ.900 வீதம் 6 காலாண்டிற்கு ரூ.8,37,000, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பதிவு செய்த 636 நபர் களுக்கு காலாண்டிற்கு தலா ரூ.1200 வீதம் 6 காலாண் டிற்கு ரூ.38,16,000, பட்டம் மற் றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்த 550 நபர் களுக்கு காலாண்டிற்கு தலா ரூ.1,800 வீதம் 6 காலாண் டிற்கு ரூ.49,50,000 என கடந்த 6 காலாண்டுகளில் மொத்தம் 1,395 நபர்களுக்கு ரூ.96,72,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திற னாளிகளுக்கு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான கல்வித் தகு தியினை பதிவு செய்த 157 மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு(3 மாதங்கள்) தலா ரூ.1,800 வீதம் 6 காலாண் டிற்கு ரூ.14,13,000, 12-ஆம் வகுப்பு தேர்ச்சியினை பதிவு செய்த 73 நபர்களுக்கு காலாண் டிற்கு தலா ரூ.2,250- வீதம் 6 காலாண்டிற்கு ரூ.8,21,250, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்த 101 நபர்களுக்கு காலாண் டிற்கு தலா ரூ.3,000 வீதம் 6 காலாண்டிற்கு ரூ.14,79,000 என கடந்த 6 காலாண்டு களில் மொத்தம் 248 நபர் களுக்கு ரூ.37,20,000 உத வித்தொகை வழங்கப்பட் டுள்ளது. தமிழக அரசின் படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு மாதாந்திர உத வித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த திருவையாறு வட்டம், கருப் பூர் கிராமத்தை சேர்ந்த மூ. வைகை நதி, கீழத்திருப்பந்து ருத்தி கிராமத்தைச் சேர்ந்த ப.பிரவின் ராஜ் உள்ளிட் டோர் அரசுக்கு நன்றி தெரி வித்துள்ளனர். மேலும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கு மாதாந்திர உத வித்தொகை வழங்கி, அவர் களது வாழ்வினை மேம் படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. தொகுப்பு: க.பிரேமலதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்