districts

img

அரசுப் பள்ளி மாணவியர் இருவருக்கு செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி

தஞ்சாவூர், நவ.8 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, இரண்டு மாணவி களுக்கு, அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கான முதல் செயற்கைக்கோள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்தியப் பிரதமர் ஐ.நா. சபை யில் பேசுகையில், 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா முன்னிட்டு, மாணவர்கள் தயாரிக்கும் 75 செயற் கைக்கோள் இந்தியாவில் இருந்து ஏவப்பட உள்ளது” என்றார். இதன்பேரில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவரின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அச்செயற்கைக்கோளுக்கு ‘அகத்தி யம் சுற்றுச்சூழல் மாணவர் செயற்கைக் கோள்’ என பெயரிடப்பட்டு, விண்ணில் ஏவப்பட உள்ளது. பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம்  வகுப்பு மாணவிகளான கலைமகள், கௌசல்யா ஆகிய இரண்டு மாணவி கள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சிக்கான முதல் கட்டப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.  இத்திட்டத்தில் பயிற்சி பெறுவ தற்காக, தமிழகம் முழுவதும் 26  மாவட்டங்களில் இருந்து 86 மாண வர்கள், 26 ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்க ளுக்கான செயற்கைக்கோள் தயாரிக் கும் பயிற்சிக்கு, மூத்த விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணுப்பிள்ளை, ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து இணையம் வழியாக வகுப்புகளை நடத்தி வருகிறார். அவருடன் இணை ந்து, இஸ்ரோவின் விஞ்ஞானிகளான ஆர்.எம்.வாசகம், ஆர்.வெங்கடேசன், வி.சசிகுமார், இளங்கோவன் ஆகியோ ரும், வகுப்பெடுத்து வருகின்றனர்.   இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவ ருடனும் இணைய வகுப்புகளில் நேர டியாக தமிழில் உரையாடி பயிற்சியை  கண்காணித்து வருகின்றனர்.

இது, இந்தியாவில் அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கான முதல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவ முக்கிய காரணமாக அகத்தியம் அறக்கட்டளை, URSAGO சொல்யூஷன்ஸ், ஐ.டி.சி.ஏ குழுமம், ராம்சரண் அண்ட் கோ ஆகியன இருந்து வருகின்றன.  ஐ.டி.சி.ஏ - பெங்களூர் தலைமை யில், ரூ.1 கோடி மதிப்பிலான மாணவர் செயற்கைக்கோளானது விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், மாணவி கள் இஸ்ரோவின் முக்கிய இடங்க ளான யூ.எஸ்.ராவ் ஸ்பேஸ் சென்டர் (URSC), நியூ டெக் பிரைவேட் லிமி டெட் மற்றும் எல்.பி.எஸ்.சி எனப்படும் Liquid propellant system centre, Bangalore ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று, செயற்கைக்கோளின் பகுதிகள் தயாரிக்கப்படும் விதம் மற்றும் அவை எவ்வாறு இயங்கு கிறது என்பதை கடந்த நவ.1 முதல் நவ.7 ஆம் தேதி வரை பார்வையிட்டு தெரிந்து கொண்டனர். மேலும், இந்த ஒரு வார பயிற்சி யில் மாணவிகள் இஸ்ரோவின் மூத்த  அறிவியல் விஞ்ஞானிகளான ஆர்.எம். வாசகம், மயில்சாமி அண்ணாதுரை, கே.சிவன் ஆகியோரை நேரடியாக சந்தித்து, அவர்கள் எடுத்த வகுப்புகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை மாணவி களிடம் தமிழில் கேட்டும், உரையா டியும் மகிழ்ந்தனர். இந்நிலையில் முதல் மாணவர் செயற்கைக்கோளை ஏவுவதற்கான, முதல் கட்ட பயிற்சியை முடித்து திரும்பிய இம்மாணவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சத்யா வை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பட்டுக்கோட்டை கு.திராவிடச் செல்வன், பள்ளி தலைமை ஆசிரியை பாமா, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்.