districts

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், அக்.1- தஞ்சை மாவட்ட சாலையோர சிறுகடை  விற்பனையாளர்கள் சங்கம் (சிஐடியு) பேரவைக் கூட்டம் தஞ்சையில், மாவட்டத் தலைவர் ஆர்.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் துவக்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர் பிரபு வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.  இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டத் தலைவராக ஆர்.மணிமாறன், மாவட்டச் செயலாளராக எஸ்.மில்லர் பிரபு ,மாவட்ட பொருளாளராக வாலி  பரோட்டா பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர்.  சிஐடியு மாவட்ட தலைவர் டி.கோவிந்த ராஜ், மாவட்ட துணை செயலாளர் கே. அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செயலா ளர் ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐ டியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு  நிறைவுரையாற்றினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “தஞ்சையில் அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிஐடியு மாவட்ட மாநாட்டு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட சாலையோர சிறுகடை வியா பாரிகள் பங்கேற்பது, சாலையோர வியாபாரி களுக்கு நிபந்தனையின்றி வங்கிக் கடன், அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;