districts

img

ஃபிட் இந்தியா மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஃபிட் இந்தியா மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 முதல் 9  மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 350 பேர் கலந்து கொண்டனர். ஓட்டப்பந்தயத்தை பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கே.சோழபாண்டியன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் சோலை, முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.