தஞ்சாவூர், மார்ச் 31 - தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள், கடலில் 17 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு ஆய்வுப் பணியின் போது, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் வந்த மீனவர்கள், மீன்பிடி வலைகளை விட்டுவிட்டு, படகுடன் தப்பிச் சென்றனர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த, மீன்பிடி விசைப்படகுகள், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியில், வாரம் முழுவதும் தங்கி மீன்பிடிப்பு மேற்கொள்வதால், தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதம் ஏற்படுகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, கடல் வளங்களை முற்றிலுமாக அழிப்பதால், விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. வெளி மாவட்ட மீனவர்களால், மீன்பிடித் தொழில் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது என தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்களால் தொ டர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் அறிவுரையின் பேரில், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமு கத்திலிருந்து, இரண்டு விசைப்படகுகளில், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வள மேற்பார்வை யாளர் சுரேஷ், கடல் மீன்பிடி சட்ட அமலாக் கப் பிரிவு முத்துராமலிங்கம், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு ராஜா மற்றும் மீனவப் பிரதிநிதிகள், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதிகளில் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, காரைக்கால் மாவட் டத்தைச் சேர்ந்த, இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அருகே சென்றபோது ஆய்வுப் பணி படகுகளை கண்டதும், காரைக் கால் மீனவர்கள் தங்கள் வலைகளை அறுத்து விட்டு, அதிகாரிகளிடம் சிக்காமல் அங்கி ருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து அந்த வலைகளை பறி முதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள், அதில் இருந்த மீன்களை ஏலத்தில் விட்டு, பணத்தை அரசு கணக்கில் செலுத்தினர். மேலும், சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வலை கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.