தஞ்சாவூர், ஜூன் 19 - தஞ்சை மாவட்டம், சேதுபாவா சத்திரம், கிழக்கு கடற்கரைப் பகுதி யில், எதிர் வரும் காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க மீன்பிடி தடைக்காலத்தை இருபிரிவுகளாக மாற்றியமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை பகுதியில், மீன்பிடித் தடை காலம் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன் இனப்பெருக்க காலம் எனகூறி மீன்பிடித் தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம், சேதுபாவா சத்திரம் பகுதியில் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில், சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங் களில் மீன்பிடி இறங்கு தளங்கள் உள்ளன.
தஞ்சை மாவட்டத்தில், சுமார் 146 விசைப்படகுகளும், சுமார் 4 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு களும் உள்ளன. ஏற்கனவே மீன்பிடித் தடைக்காலம் 45 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நாட்டுப்படகுகளுக்கு மீன் பிடிக்கத் தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிபட்டினம் தாஜூதீன் கூறுகையில்,
“மீன் இனப்பெருக்க காலம் எனக் கூறி தடைக் காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளே பெருத்த நட்டம் ஏற்படுகிறது. ஆர்வத்தோடு செல்லும் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வரு கின்றனர். ஒரு சில தினங்கள் மட்டுமே அதிக அளவில் மீன்கள் பிடிபடுகின்றன.
தற்போது கோடைக்காலத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் என்பதை மாற்றி, ஏப்ரல் 15 முதல் மே 15 வரை ஒரு மாதமும், அதிக மழை, புயல், இயற்கை சீற்றம் ஏற்படும் நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரை என ஒரு மாதமும் இரண்டு தடவையாக மீன்பிடித் தடைக் காலத்தை அரசு அறிவிக்க வேண்டும்” என்றார்.
படகுகளை சீரமைக்க கடன் தருக!
விசைப்படகு மீனவர்கள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் ராஜ மாணிக்கம் கூறுகையில், “தடைக் காலத்தில் படகுகளை செயல்படுத்தா மல் கட்டி வைப்பதால், இரண்டு மாதம் கழித்து மீண்டும் படகுகளை இயக்கும் போது, 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், தடைக் காலம் முடிந்த பின் மீனவர்கள் தங்கள் படகு களை, பழுது நீக்கம் செய்து, செயல் படுத்த ஏதுவாக குறைந்த வட்டி விகி தத்தில் அரசுடைமை வங்கிகளில் ஓராண்டு தவணையில் கடன் வழங்க வேண்டும்.
மேலும், மழை, வெள்ளக் காலங் களில் புயல் போன்ற இயற்கை சீற்றங் களால் முறையாக மீன்பிடித் தொழில் செய்ய முடியவில்லை. எனவே, தற்போது உள்ள தடைக்காலத்தை மாற்றி நவம்பர், டிசம்பர் மாற்றி யமைக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டம் இன்றி தொழில் செய்ய முடியும்” என்று கூறினார்.