districts

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு

தஞ்சாவூர், ஜூன் 13-  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்  என தென்னக ரயில்வே அறிவித்துள் ளது. இதையடுத்து பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  எர்ணாகுளத்திலிருந்து வேளாங் கண்ணிக்கு கடந்த இரண்டு வாரங்களாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப் பட்டு வருகிறது. இந்த வாராந்திர சிறப்பு  எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. வாரந்தோ றும் சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்று சேர்ந்து, மாலை 6.30 மணிக்கு நாகப் பட்டினத்திலிருந்து புறப்பட்டு திங்கள் கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணா குளம் சென்றடையும். ஆரம்பத்தில் இந்த ரயில் குறிப்பிட்ட சில ரயில் நிலை யங்களில் மட்டுமே நின்று செல்லும் என  அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.   பேராவூரணி ரயில் நிலையத்தில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காததால், நின்று செல்ல வேண்டுமென ரயில்  பயணிகள் சங்கம் உள்ளிட்ட  பல்வேறு  அமைப்பினரும் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலை யில், கோரிக்கையை ஏற்று பேராவூரணி  ரயில் நிலையத்தில் ஜூன் 11 ஆம் தேதி  முதல் ரயில் நின்று செல்லும் என தென்னக  ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.  எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி யளவில் பேராவூரணி ரயில் நிலையம் வந்த ரயிலுக்கும், மறுமார்க்கத்தில் நாகப் பட்டினத்திலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 மணிக்கு  பேராவூரணி வந்த ரயிலுக்கும் சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது.  வரவேற்பு நிகழ்ச்சியில் பேராவூரணி ரயில் பயணிகள் சங்கம், வட்ட ரயில் பய னாளிகள் சங்கம், வர்த்தக சங்கம், லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள், கடை மடை பகுதி விவசாய சங்கத்தினர் உட்பட  பல்வேறு அமைப்பினர் ரயில் ஓட்டுநர் களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு  வழங்கி கெளரவித்தனர்.