கும்பகோணம், ஜூலை 19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரினுள் ஏற்படும் போக்குவரத்து நெரி சலை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீ சார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மாநகரினுள் வியாபாரிகள் தங்கள் வியா பார நிறுவனங்களுக்கு முன்பு சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள பிளக்ஸ் பேனர் கள், இரும்பு தடுப்புகள், வியாபார பொருட் களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போலீசார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “கும்பகோணம் மாநகரின் முக்கிய சாலை களில் குறிப்பாக கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் உள்ள மொட்டைகோபுரம் பகுதி முதல் நால்ரோடு சந்திப்பு வரை, டைமண்ட் தியேட்டர் முதல் பாலக்கரை சந்திப்பு, சாந்தி காபி முதல் ராமசாமி கோவில் மற்றும் ரயில்வே ஜங்ஷன் முதல் மகாமககுளம் வரை உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகளுக்கு முன்பு இரும்பு தளம்போடுவது, வியாபார பொருட்களை அடுக்கி வைப்பது போன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபட கூடாது. கும்பகோணம் மாநகரின் முக்கிய சாலை களில் போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்யும் போது, போலீசாரின் அறிவுறுத் தலை மீறி வைக்கப்படும் ஆக்கிரமிப்புகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அந்த கடை யின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.