districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: சேதமடைந்த சாலை சீரமைப்பு

தஞ்சாவூர், மே 10 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், செல்வவிநாய கர்புரம் பூனைக்குத்திக்கொல்லை காட்டாற்றுப் பாலத்தில் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தன. இதனால் வாகன ஓட்டி கள் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டது.  இப்பகுதியில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள், பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று வந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த கனமழை காரண மாக காட்டாற்றில் தண்ணீர் சென்றதால் பாலம்  சேதமடைந்தது. இப்பாலத்தை, இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என  கோரிக்கை எழுந்தது. மேலும் பாலத்தின் மேல் உள்ள தார்ச்சாலை பெயர்ந்து குண்டும்  குழியுமாக இருந்தது. எனவே, முதல்கட்ட மாக சுமார் 200 மீட்டர் நீளமுள்ள சாலையை  தார்ச் சாலையாக அமைத்து தர வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தி ருந்தனர். இதுகுறித்து கடந்த ஏப்ரல் 29 அன்று தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியா னது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை சாலை சீரமைக்கும் பணிகள்  நடைபெற்றன. தற்போது பாலத்தின் மேல்  தார்ச்சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.