தஞ்சாவூர், மார்ச் 23 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில், சுகாதாரமற்ற நிலையில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் நோய் பரப்பும் மையம் போன்று காணப்படு வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து, செவ்வாய்க் கிழமை தீக்கதிர் நாளிதழில், “பட்டுக்கோட்டை: சுகாதார மின்றி கிடக்கும் பேருந்து நிலைய கழிப்பறை” என்ற தலைப்பில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து, அன்றைய தினமே, பட்டுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் சண்முகப் பிரியா செந்தில்குமார், பேருந்து நிலைய பொது கழிப்பறையை ஆய்வு செய்தார். உடனடியாக தூய்மைப் பணியாளர்களை வர வழைத்து, கழிப்பிடத்தை சுத்தம் செய்ய உத்தர விட்டார். தொடர்ந்து ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணி மேற்கொள் ளப்பட்டது. மேலும், கழிப்பி டத்தில் தண்ணீர் வசதி, டேப் பொருத்தவும் நகர்மன்றத் தலைவர் உத்தரவிட்டார். குறைகளை செய்தியாக வெளியிட்டு கவனத்திற்கு கொண்டு வந்த தீக்கதிர் நாளிதழுக்கும் நன்றி தெரி வித்தார். மேலும், பொதுக் கழிப்பிடங்களை தினசரி தூய்மைப்படுத்த வேண்டு மென அறிவுறுத்தினார்.