தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த, ரெட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர் முனைவர் ஜீவானந்தம் (53). இவர் தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளராக உள்ளார். இந்நிலையில் மொழிவாரி மாநில அமைப்பு தினமான நவ.1 அன்று, “இந்தியை திணிக்காதே, இந்தியாவை உடைக்காதே” என்ற முழக்கத்துடன் பேராவூரணி நகர் முழுவதும் குடையுடன் வலம் வந்து பிரச்சாரம் செய்தார்.