கும்பகோணம், அக்.26 - கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தீபாவளி பண்டிகை சரிவர கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், திங்களன்று (அக்.24) மக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டி கையை கொண்டாடினர். இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்தி னர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பட்டாசுகளை குறித்த நேரத்தில் வெடிக்க வேண்டுமென மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலை யில் அக்.23 ஆம் தேதி மாலை 6 மணி முதல் தீபாவளி பட்டாசு களை வெடிக்க தொடங்கினர். பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்து சம்ப வங்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் நடைபெறும் தீ விபத்து சம்பவங்களால், பாதிப்பு ஏற்படாமல் மீட்கும் பணி களை மேற்கொள்வதற்காக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக தீபாவளி பட்டாசுகள் வெடித்ததில், தீ விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக தீயணைப்பு நிலையத்திற்கு எந்தவொரு தொலைபேசி அழைப்பும் வரவில்லை. எனவே, திருவிடைமருதூரில் தீ விபத்து இல்லாத மகிழ்ச்சி யான தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.