தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சரபோஜிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ராமசாமியின் மனைவி மீனாட்சி, அம்மாபேட்டை சரகம் நெடுவாசலைச் சேர்ந்த சுதந்திர போராட்டத் தியாகி சண்முகம் ஆகியோரை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி நேரில் சந்தித்து மரியாதைச் செலுத்தினார்.