தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே ராரா முத்திரக் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் முருங்கை மரக்கன்றுகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் சோழன், துணைத் தலைவர் புனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.