தஞ்சாவூர், ஏப்.17 - படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, அதிராம்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கிய இரண்டு இலங்கை மீனவர்களிடம் கட லோர காவல் படையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அதி ராம்பட்டினம் அருகே கீழத் தோட்டம் மீனவ கிராம பகுதி யில், சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு இலங்கை பதிவு எண் கொண்ட, பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி யுள்ளது. அதில், சந்தேகத்திற் கிடமாக இருவர் இருப்ப தாக, அப்பகுதியினர் கட லோர காவல் குழுமத்திற்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து கடலோர காவல்ப டையினர் சம்பவ இடத்திற் குச் சென்று இருவரையும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அந்த படகு இலங்கை, முல்லைத் தீவு ஆழியாவலையைச் சேர்ந்த நாதன் என்பவருக்கு சொந்தமான, இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகு என்பது தெரியவந்தது. மேலும், தலைமன்னார் அருகே உதயபுரம் பகுதி யைச் சேர்ந்த சுதாகர் (26), முல்லைத்தீவு சிலாவெட்டு பகுதியைச் சேர்ந்த ரோசன் (30) இருவரும், கடந்த ஏப்.13 ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், பாய்மரப் படகை பயன்படுத்தி இந்தியக் கடல்பகுதியில் கரை ஒதுங்கியதாக தெரி வித்தனர். தொடர்ந்து அவர்களிடம் எவ்வித அடையாள அட்டைக ளும் இல்லாத நிலையில், இலங்கையிலிருந்து அகதி யாகக் குடியேறுவதற்காக வந்தார்களா? அல்லது சட்ட விரோத செயல்களில் ஈடுபட வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், இருவருக்கும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோ தனைக்கு பிறகு நீதிமன்றத் தில் ஆஜர்ப்படுத்தி சிறை யில் அடைக்க கடலோரக் காவல்படையினர் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.